follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மகளிர் உலகக் கிண்ண தொடருக்கான இடங்களைத் தெரிவு செய்ய ஒருங்கிணைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2025 – 2026ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் குறித்த கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களைத் தடை செய்யுமாறு அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை அறிவுறுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...