follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

போட்டிக்கான இடம், அட்டவணை எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மகளிர் உலகக் கிண்ண தொடருக்கான இடங்களைத் தெரிவு செய்ய ஒருங்கிணைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2025 – 2026ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிக்கான அட்டவணையும் குறித்த கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது, மதுபானம், புகையிலை சம்பந்தமான விளம்பரங்களைத் தடை செய்யுமாறு அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை அறிவுறுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...