follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 76 இளைஞர் யுவதிகள் கைது

பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 76 இளைஞர் யுவதிகள் கைது

Published on

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதீகொடன் பெல்லானவத்த பகுதியில் விருந்தகம் ஒன்றில் சட்ட விரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தி முகநூல் களியாட்டம் நடைபெறுவதாக பொலிசாருக்கு நேற்று முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் போது பொலிசார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு 76 பேரைக் கைது செய்துள்ளனர்.

களியாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பாவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, மற்றும் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் 3 பெண் சந்தேக நபர்களும், 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் இதில் கலந்து கொண்டிருந்த மேலும் 12 யுவதிகளையும், 47 இளைஞர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்ட, கொழும்பை அண்டிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...