follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

Published on

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று முற்பகல் 10 மணியளவில், தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில்

குறித்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்குரிய தீர்வு எட்டப்படாதவிடத்து, உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நள்ளிரவு முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவிருந்த நிலையில், அதனை இன்றைய தினம் வரையில், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பிற்போட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...