follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டு'நோட் புக்' கொண்டாட்டம் - திக்வேஷ் ரதிக்கு அபராதம்

‘நோட் புக்’ கொண்டாட்டம் – திக்வேஷ் ரதிக்கு அபராதம்

Published on

லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் இடம்பெற்றிருந்தது.

இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா, 8 ஓட்டங்களை எடுத்த போது லக்னோ வேகப்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி பந்தில் (2.5 வது ஓவர்) ஷர்துல் தாகூரிடம் பிடி கொடுத்து தோல்வியுற்றார். அப்போது வேகமாக ஆர்யா அருகில் சென்ற திக்வேஷ், ‘கடிதம் எழுதி’ அனுப்புவது போல கையால் ‘சைகை’ செய்தார்.

கடந்த 2019 ல் இந்தியாவின் கோலியை அவுட்டாக்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் செய்த ‘நோட் புக்’ கொண்டாட்டம் போல இது இருந்தது.

வர்ணனை செய்து கொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், முகமது கைப் உள்ளிட்டோர், திக்வேஷ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திக்வேஷ், ஆர்யா என இருவரும் டில்லி அணிக்காக விளையாடுகின்றனர். இவர்கள் நண்பர்கள் தான் என்றாலும், பிரிமியர் கிரிக்கெட் விதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் திக்வேஷிற்கு, போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஒரு தகுதியிழப்பு வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...