follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டு'நோட் புக்' கொண்டாட்டம் - திக்வேஷ் ரதிக்கு அபராதம்

‘நோட் புக்’ கொண்டாட்டம் – திக்வேஷ் ரதிக்கு அபராதம்

Published on

லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் இடம்பெற்றிருந்தது.

இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா, 8 ஓட்டங்களை எடுத்த போது லக்னோ வேகப்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி பந்தில் (2.5 வது ஓவர்) ஷர்துல் தாகூரிடம் பிடி கொடுத்து தோல்வியுற்றார். அப்போது வேகமாக ஆர்யா அருகில் சென்ற திக்வேஷ், ‘கடிதம் எழுதி’ அனுப்புவது போல கையால் ‘சைகை’ செய்தார்.

கடந்த 2019 ல் இந்தியாவின் கோலியை அவுட்டாக்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் செய்த ‘நோட் புக்’ கொண்டாட்டம் போல இது இருந்தது.

வர்ணனை செய்து கொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், முகமது கைப் உள்ளிட்டோர், திக்வேஷ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திக்வேஷ், ஆர்யா என இருவரும் டில்லி அணிக்காக விளையாடுகின்றனர். இவர்கள் நண்பர்கள் தான் என்றாலும், பிரிமியர் கிரிக்கெட் விதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் திக்வேஷிற்கு, போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஒரு தகுதியிழப்பு வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...