follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

Published on

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு கட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.

இதில் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, தேர்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பல கட்டங்கள் அண்மையில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி, முழு நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

நேற்றைய (03) வரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...