follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

Published on

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தையின் S&P 500 விலைச் சுட்டெண், 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட் காலத்துக்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார சுபீட்சத்தை நோக்காகக் கொண்டு இந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும், நிலைமை மாறுதலாக இருப்பதாக பொருளியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கப் பங்குச் சந்தை மாத்திரமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...