follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1மாடியில் இருந்து குதித்த சிறுவன் - ஒருவர் கைது

மாடியில் இருந்து குதித்த சிறுவன் – ஒருவர் கைது

Published on

வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 13ஆம் திகதி, குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் அருகிலுள்ள கடை ஒன்றிற்குச் சென்றிருந்தான். அப்போது, அவர்கள் ஒரு மூன்று மாடி வீட்டு கதவைத் தட்டியுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த ஒருவர், சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்று, இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பயந்து போன சிறுவன், அங்கிருந்த ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் தற்போது தப்பியோடியுள்ளார். எனினும், இந்தச் செயலில் உதவியதாக சந்தேகிக்கப்படும் 59 வயதுடைய நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் பணிகள் இப்போது இடம்பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...

கைதுக்கு முன்னர், மஹிந்தானந்த பிணை கோரி நீதிமன்றுக்கு

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு...