follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

Published on

புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது, மற்றும் அதிக வேகத்தில் பேரூந்துகளை செலுத்துவது போன்றவை அடங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகள் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் கிராமங்களில் புத்தாண்டைக் கொண்டாடியவர்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விசேட பேரூந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...