follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூரும் புனித வெள்ளியன்று, ‘புனித வெள்ளியை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டத்தை ‘கித்துசர’ அமைப்பு ஏற்பாடு செய்தது.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...