follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉள்நாடுதங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

Published on

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது.

உலக சந்தையின் இந்த விலை அதிகரிப்பு இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் வழங்கிய தகவலின்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்து 277,000 ரூபாவாக விற்பனையாகிறது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 3000 ரூபாவினால் அதிகரித்து 255,000 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆபரண தங்கத்தின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைவடையக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...