follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கட்டான துப்பாக்கிச் சூடு - முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கட்டான துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

Published on

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

கட்டான பகுதியில் நேற்று(22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இருதரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, அங்கிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உரிமம் பெற்ற அவரது துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.

குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த கட்டானையைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...