follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1புனித பேதுரு பேராலயத்திற்கு கொண்டுவரப்படும் பரிசுத்த பாப்பரசரின் தேகம்

புனித பேதுரு பேராலயத்திற்கு கொண்டுவரப்படும் பரிசுத்த பாப்பரசரின் தேகம்

Published on

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது.

தற்சமயம் பாப்பரசரின் தேகம் காசா சண்டா மார்தா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை (26) ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவுள்ளது.

நேற்று (21) வத்திக்கான் நேரப்படி காலை 7:35 அளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்.

பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக வத்திக்கானின் வைத்தியர்கள் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

பல உலக நாடுகளின் தலைவர்கள் பரிசுத்த பாப்பரசருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...