follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

Published on

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு தேவையான குறைந்தபட்ச தொகை ரூ.16,318 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில், அதிகம் செலவாகும் மாவட்டம் கொழும்பு ஆகும். அங்கு ஒருவரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய தேவையான தொகை ரூ.17,599 ஆகும்.

மாறாக, அதிகாரப்பூர்வ வறுமை வரம்பின் குறைந்தபட்சம் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு நபருக்குத் தேவையான தொகை ரூ.15,603 எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திணைக்களம் தெரிவித்ததாவது, 2025 பெப்ரவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) மதிப்பு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், அதனால் தான் வறுமை வரம்பும் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் நாட்டின் வாழ்வு செலவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...