follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்தமை - விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்தமை – விசாரணைகள் ஆரம்பம்

Published on

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

குறித்த சிறுமி ஏற்கனவே கல்வி கற்ற கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து கடந்த வருடம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...