உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.
நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக் குழாமினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.