பாடநூல் கோட்பாடுகளுக்கு அப்பால் கோவிட் பொருளாதார பிரச்சினைகளுக்கு நடைமுறையில் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் சவாலாக இருக்கும் என தெரிவிக்கும் அதேவேளை, வழங்கப்பட்ட ஆணையை பாதுகாக்க ம.இ.கா அர்ப்பணிப்புடன் இருக்கும் என மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடநூல் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று, கொவிட்க்கு பின்னரான பொருளாதார பிரச்சினைகளை நடைமுறையில் தீர்ப்பதே அரசாங்கத்தின் சவாலாக இருக்கும்.
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும், என்பதே கட்சியின் கருத்து எனவும் இது தொடர்பான கடிதம் அரசாங்க அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.