follow the truth

follow the truth

May, 8, 2025
HomeUncategorizedஇந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்

Published on

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது.

இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் தமது எல்லைப் பகுதியில் நடத்திய குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டதாக, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும்...

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...