follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது - பிரதி அமைச்சர்

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

Published on

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் தற்போது கொத்மலை பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில உடல்கள் பேருந்தின் கீழ் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்பதற்கு பொலிஸார் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கொத்மலை பொலிஸார் சந்தேகித்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதுபோன்ற விபத்துக்களை குறைப்பதற்கு ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...