follow the truth

follow the truth

August, 17, 2025
HomeTOP2வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

Published on

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் தென்னாபிரிக்காவிலிருந்து மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

எனினும், அவர்களில் 8 பேர், எதிர்வரும் ஜூன் 11 முதல் லோர்ட்ஸில் ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உடனான ஆரம்ப ஒப்பந்தத்தில், இந்தியன் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டி 25 ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி ஜூன் மாதம் 3ஆம் திகதியே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட வேண்டியுள்ளமையினால், தமது வீரர்கள் 26 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது.

அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆபிரிக்க வீரர்களில் Corbin Bosch, Wiaan Mulder, Marco Jansen, Aiden Markram, Lungi Ngidi, Kagiso Rabada, Ryan Rickelton ஆகியோர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...