follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

Published on

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த இந்த விபத்து நேற்று (14) மாலை 5 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை, லிந்துல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த காரை சட்டத்தரணி ஒருவர் செலுத்திச்சென்றுள்ள நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் மண்மேட்டில் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் ஏற்படவில்லை. எனினும், விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், சாரதியின் கவனக் குறைவே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...