follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

Published on

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.

நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 50 வீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற முடியவில்லை.

இதன் காரணமாக உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளால் மேற்படி கலந்துரையாடல்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...