follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

Published on

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில் 90 இன்னிங்ஸ்களில் 2,265 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அவர் 5 சதங்களையும் 11 அரை சதங்களையும் அடித்துள்ளார்.

தலைவராக சேஸின் முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 50வது டெஸ்ட் போட்டியாகும்.

இருப்பினும், 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் மேற்கிந்திய தீவுகளுக்காக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக பணியாற்றிய கிரெய்க் பிராத்வைட், கடந்த மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...