follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

Published on

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதோடு, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் துசித ஹல்லொலுவ மற்றும் குறித்த அறிக்கையை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக துரித விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...