follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

Published on

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதோடு, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் துசித ஹல்லொலுவ மற்றும் குறித்த அறிக்கையை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக துரித விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...