follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

Published on

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதோடு, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் துசித ஹல்லொலுவ மற்றும் குறித்த அறிக்கையை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக துரித விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...