follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP1தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

Published on

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன் முடிவுகளை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இன்று (19) முதல் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய அவர் இன்று முதல் முறையாக குழு முன்பு ஆஜராகவுள்ளார்.

இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை எண் 8இல் கூடவுள்ளது.

கடந்த 15ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மிலான் ஜயதிலக்க கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது...

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க UNP – SJB இடையே இணக்கப்பாடு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்தானந்த நீதிமன்றில் ஆஜர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்...