follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

Published on

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன் முடிவுகளை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இன்று (19) முதல் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய அவர் இன்று முதல் முறையாக குழு முன்பு ஆஜராகவுள்ளார்.

இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை எண் 8இல் கூடவுள்ளது.

கடந்த 15ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...