follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

Published on

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன் முடிவுகளை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இன்று (19) முதல் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய அவர் இன்று முதல் முறையாக குழு முன்பு ஆஜராகவுள்ளார்.

இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை எண் 8இல் கூடவுள்ளது.

கடந்த 15ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...