follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1முதலைக்கு இரையாகும் முதலைகள்

முதலைக்கு இரையாகும் முதலைகள்

Published on

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் நபர் ஒருவர் மேலும் மூன்று பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு முதலை களப்பிலிருந்து வெளிவந்து அந்த நபரைப் பிடித்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை முதலை இழுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முதலைக்கு இரையான நபரைக் கண்டுபிடிக்க காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகம் மற்றும் கஜுவத்த கடற்படை தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...