follow the truth

follow the truth

May, 30, 2025
HomeTOP1UPDATE - மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை

UPDATE – மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை

Published on

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – நாடு முழுவதும் 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்...

சீரற்ற காலநிலை கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்கள் பாதிப்பு

கனமழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரான அத்தநாயக்க எம். ஹேரத் அவர்கள் காலமானார். அவர்...