உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலாக 240 பேருடைய கூட்டமைப்பொன்றினால் தயார் செய்யப்பட்ட யோசனை தொகுப்பு, நேற்று(29) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தாலும், தற்போது வரை எந்த புதிய சட்டமொன்றும் இறுதியாக தயாரிக்கப்படவில்லை எனவும், தற்போது அதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.