ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, வெளியில் செல்லும் போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு பிரதி ஒன்றை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால், 009 61- 81 549 162 அல்லது 009 61- 81 363 894 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.