follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2பெண்கள் 'டி-20' உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

பெண்கள் ‘டி-20’ உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

Published on

பெண்களுக்கான ‘டி-20’ உலக கிண்ண அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ‘டி-20’ உலக கிண்ண தொடர் நடத்தப்படுகிறது.

இதன் 10வது தொடர் அடுத்த ஆண்டு (ஜூன் 12 – ஜூலை 5) இங்கிலாந்தில் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. 24 நாட்களில் இறுதி, அரையிறுதி உட்பட 33 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக பர்மிங்காம், பிரிஸ்டோல், லீட்ஸ், லண்டன் லார்ட்ஸ், லண்டன் ஓவல், மான்செஸ்டர், சவுத்தாம்டன் என 7 இடங்கள் தேர்வாகின.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து, ‘நடப்பு சாம்பியன்’ நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள 4 இடத்துக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். மொத்தமுள்ள 12 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடும். முடிவில், ‘டாப்-2’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் 2 அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

2026, ஜூன் 14ல் (பர்மிங்காம்) தனது முதல் லீக் போட்டியில் களமிறங்கும் இந்தியா, அதன்பின் ஜூன் 17 (லீட்ஸ், தகுதிச் சுற்று அணி), ஜூன் 21 (மான்செஸ்டர், எதிர்: தென் ஆப்ரிக்கா), ஜூன் 25 (மான்செஸ்டர், தகுதிச் சுற்று அணி), ஜூன் 28ல் (லார்ட்ஸ், எதிர்: ஆஸி.,) விளையாடுகிறது.

இரண்டு அரையிறுதி போட்டிகளும் (ஜூன் 30, ஜூலை 2) லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளன. பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5ல் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...