முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (19) காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கெஹெலியவின் மகள்கள் சமித்ரா ஜெயஷிகா ரம்புக்வெல்ல, அமலி நியாஷிகா ரம்புக்வெல்ல மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி ஆகியோர் அடங்குவர்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகள் ஆகியோரும் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.