follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published on

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணிலில் கருத்தை கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி...

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார்...

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன்...