follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP2இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தண்டனை தொடரும் - ஈரானின் உச்சபட்ச தலைவர்

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தண்டனை தொடரும் – ஈரானின் உச்சபட்ச தலைவர்

Published on

இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் ஆதரவை CMC அதிகாரத்தைப் பெறுவதற்காக நாடவில்லை என்பதை நிரூபியுங்கள்

கொழும்பு மாநகர சபையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன நிலையில் அத்தகைய நபர்களின்...

என் கணவர் நிரபராதி – NPP அரசு அரசியல் செல்வாக்கை கையாண்டது – மஹிந்தானந்தவின் மனைவி கண்டனம்

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி செனானி ஜெயரத்ன, அண்மையில் ஒரு பெரிய ஊழல் வழக்கில் தனது...

ஆடம்பர சொத்துக்கள் பல அரசியல்வாதிகள் தொடர்பில் CID விசாரணை

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால்...