follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP1பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

Published on

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, பயணச்சீட்டு வழங்குமிடம், நிர்வாகப் பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெக்டெயார் 1.42 நிலப்பரப்புடன் கூடிய மத்திய பேருந்து நிலையம் 1964 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாளாந்தம் 1500 – 2000 வரையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

200 உள்ளூராட்சி மன்றங்கள் NPP வசம்

தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட...

04 அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. அந்தக் குழு...

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு...