முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மொத்தம் 43 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை இவ்வருடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.