follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் - காமெய்னி சூளுரை

எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் – காமெய்னி சூளுரை

Published on

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க ஜனாதிபதி சொல்வது போன்று நாங்கள் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் என்றும் எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மீண்டும் இஸ்ரேல் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாமும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ள காமெய்னி உலகின் எந்த நாடு தங்கள் மேல் தாக்குதல் நடத்தினாலும் நாமும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு யூத சியோனிச ரெஜீம் வீழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ள காமெய்னி அமெரிக்க தலையிடா விட்டால் யூத ரெஜீம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

யூத ரெஜீம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...