follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

Published on

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான 12 நாள் மோதலுக்குப் பின்னர், ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதலின் போது தற்காலிக இடையூறுகள் இருந்த போதிலும், வர்த்தக பாதைகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

போரைக் காட்டிலும் ராஜதந்திரத்தையே ஈரான் விரும்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதலை அதிகரித்ததற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய அவர், இலங்கையின் நடுநிலை மற்றும் சமநிலையான நிலைப்பாட்டுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக முறையான முறைப்பாடளிக்க ஈரான் தயாராகி வருகிறது என, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...