follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தமது பதவிலிருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கே, பொத்துவில் நகர சபையின் முன்னாள் தலைவரான அப்துல் வாஸித்தை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுவையான திரிபோஷா கப்கேக் அறிமுகம்

நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்,...

சமூக ஊடக மோசடிகள் குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். Facebook, WhatsApp, Telegram,...

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.