follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம்

Published on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தமது பதவிலிருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கே, பொத்துவில் நகர சபையின் முன்னாள் தலைவரான அப்துல் வாஸித்தை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...