follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP1ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

Published on

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று(29) மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.

பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக் கண்டறிய முடியாமல் வழி தவறியிருந்தனர்.

இதைப் பற்றி பெற்றோருக்கு அறிவித்த பின்னர், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்கள் உட்பட குழுவினரைக் கண்டறிந்தனர்.

மீட்கப்பட்ட குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...

கச்சத்தீவு இலங்கையின் இறைமையான சொத்து – மீளப்பறிக்க முடியாது: அமைச்சர் சந்திரசேகர்

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு, இங்குள்ள இரண்டு கோடி மக்களின் இறைமையான சொத்தாகும் என்றும், அதை எவராலும் மீளப்பறிக்க முடியாது...

தன்பாலின சட்டம் குறித்து உயர்ஸ்தானிகரின் கருத்தை நீதி அமைச்சர் மறுப்பு

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட...