இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் 70 வயதுடைய ஒருவர் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஆரம்பமாகி, ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் மூன்றாவது நாளான இன்று இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.