follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP2யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

Published on

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் 70 வயதுடைய ஒருவர் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஆரம்பமாகி, ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் மூன்றாவது நாளான இன்று இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை...

சென்னையில் இருந்து புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப...

ஜூனில் ஒரு இலட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...