follow the truth

follow the truth

June, 29, 2025
Homeஉலகம்சென்னையில் இருந்து புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து

சென்னையில் இருந்து புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து

Published on

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 146 பயணிகளுடன் புறப்படவிருந்த அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானப்பயணத்திற்குத் தயாராகியிருந்த நிலையில், விமானி தொழில்நுட்ப கோளாறை அடையாளம் கண்டுள்ளார். இதனால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, விமானம் இன்று இரவு அல்லது நாளை காலை புறப்படும் என தாய் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை...

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட...

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும்...