follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

Published on

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள புகைப்படங்களை, ‘கிளவுட் பிராசஸிங்’ அம்சம் மூலம் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயனர்கள் தாங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாத படங்களையும் மெட்டா ஏஐ ஸ்கேன் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், இது பெரும் பிரைவசி சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மெட்டா தரப்பில் இது பயனர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என்றும், அவர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை எந்த நேரத்திலும் டிசேபிள் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், ‘கிளவுட் பிராசஸிங்’ அம்சத்தை ஆஃப் செய்தால், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட படங்கள் 30 நாட்களில் மெட்டா கிளவுடிலிருந்து நீக்கப்படும் எனவும் நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், பயனர்கள் ஒப்புதல் அளிக்காத புகைப்படங்களை ஸ்கேன் செய்வது குறித்த இந்த நடவடிக்கை, மெட்டா ஏற்கனவே எதிர்கொண்ட பிரைவசி குறைந்தபட்ச தகுதியை மீறும் செயல்களையும் மீண்டும் நினைவூட்டுகிறது.

முன்னதாக, 2007 முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பெரியவர்களால் (adults) பதிவேற்றப்பட்ட உள்ளடக்கங்களை மெட்டா தனது ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தியதாக நிறுவனம் ஒப்புக்கொண்டதுடன், அதற்கான முழுமையான விளக்கங்களை வழங்க மறுத்தது.

தற்போது, பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களுக்கே மெட்டா ஏஐ அணுகும் நிலைமை, எதிர்காலத்தில் இந்த படங்களை ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை மெட்டா தரப்பில் நிர்வாகிகள் இன்னும் வழங்கவில்லை.

எனவே, மெட்டா சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் பிரைவசி அமைப்புகளை பரிசீலித்து, அத்துடன் எவ்வித அனுமதியையும் வழங்கும் முன் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...