follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

Published on

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கையை இறுதிப்படுத்தும் முன்னர், இன்னும் சில மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அது பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் பிறரிடம் இருந்து மொத்தம் 110 மணி நேரத்துக்கும் அதிகமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி, பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம...

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...

கச்சத்தீவு இலங்கையின் இறைமையான சொத்து – மீளப்பறிக்க முடியாது: அமைச்சர் சந்திரசேகர்

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு, இங்குள்ள இரண்டு கோடி மக்களின் இறைமையான சொத்தாகும் என்றும், அதை எவராலும் மீளப்பறிக்க முடியாது...