follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

Published on

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அதேசமயம் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்படாத உப்பு...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

கொழும்பு பங்குச் சந்தை 18,000 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளை கடந்துள்ளதுடன், இது வரலாற்றில்...