தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் வலியுறுத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.
காம்போடியாவுடன் நிலவி வரும் எல்லை விரோதம் மற்றும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியாகிய பிரதமரின் ரகசிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஏற்பட்ட எழுச்சியின் பிரதிபலனாகவே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தொலைபேசி உரையாடலில், பிரதமர் ஷினவத்திரா, காம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் ஸென் உடன் உரையாடும் போது, தன்னுடைய நாட்டுக்கே எதிராகவும், தாய்லாந்து இராணுவத் தலைவரை குறித்தும் எதிர்மறையான கருத்துகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும் அரசியல் நிலைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருதி வருகின்றனர்.
38 வயதான ஷினவத்திரா 2023ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து பலவிதமான எதிர்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது நடைப்பெற்ற போராட்டம் இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் எழுச்சியாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, வரவிருக்கும் மாதத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படவிருக்கின்றது என்றும், தற்போது அரசின் கூட்டணி கட்சிகள் சில, அவர்களுக்கு ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.