follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

Published on

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய பீச்சியான விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோதிய வேகத்தில் இரு பஸ்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதோடு, பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதிலும், பலரை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பயணிகள் இருந்த பஸ்சின் டயர் பஞ்சராக, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டதாக போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய...

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்

முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...